சின்னத்திரையில் நடிகைகளாக வலம் வருபவர்கள் சைத்ரா ரெட்டி மற்றும் நக்ஷத்திரா. இவர்கள் இருவரும் தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் இணைந்து நடித்திருந்தார்கள். அப்போது இருந்து இருவரும் நல்ல தோழிகளாக இருக்கின்றார்கள். இதில் சைத்ரா தற்போது கயல் சீரியலில் நடிக்கின்றார். நக்ஷத்திரா சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் நடிக்கவில்லை.

இந்த நிலையில் தோழியை காண சென்றபோது கர்ப்பமாக இருக்கும் நக்ஷத்திராவின் வயிற்றை முத்தமிட்டும் கட்டி அணைத்தும் தனது பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இருவரின் நட்பை ரசிகர்கள் பலர்  பாராட்டி வருகின்றார்கள்.