தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது பல படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.  அந்தவகையில் மான் கராத்தே, யாமிருக்க பயமேன், கோலமாவு கோகிலா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தனது சினிமா வாழ்க்கை குறித்து இவர் முதன்முதலாக மனம் திறந்து பேசியுள்ளார்.

அதன்படி, ஆரம்ப காலத்தில் வாய்ப்பு கேட்டு போன போது, என்னை அவமானப்படுத்தி வெளியேற்றிய இடமாக இருந்தாலும் அதே இடத்தில் இன்று போய் நடிக்கிறேன் என யோகிபாபு பெருமிதம் கூறினார். இதுபற்றி பேட்டி ஒன்றில் அவர், நான் காமெடி நடிகர்தான். சண்டை காட்சியில் நடிப்பதெல்லாம் எனக்கு தேவை இல்லாதது. இதுவரை 300 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். கஷ்டப்பட்டால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறேன் என்றார்.