சென்னை விமான நிலையத்திற்கு உள் மற்றும் வெளி நாடுகளில்  இருந்து ஏராளமான பயணிகள் அனுதினமும் வந்து செல்கின்றனர். இங்கு வெளிநாடு மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக ஏராளமான விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ஆர்ச் குளோபல் நிறுவனம் மற்றும் பி எஸ் என் எல் நிறுவனம் இணைந்து விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்காக இலவச WIFI வசதியை தொடங்கியுள்ளது.

நேற்று தொடங்கப்பட்ட இந்த வசதியை  பயணிகள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றன. இதற்காக ஒரு கருவி வைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் பயணிகள் தங்களது கைபேசி எண்ணை பதிவிட வேண்டும். அதன் மூலம்  45 நிமிடங்கள் வரை 500 எம்பி டேட்டா பயன்படுத்தலாம். அதோடு பயணிகள் தங்களுக்கான வாகனங்களை முன் பதிவு செய்து கொள்வதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக வெளிநாட்டு பயணிகள் இங்குள்ள எண்கள் இல்லாமலேயே இந்த வசதியை  பயன்படுத்திக் கொள்ள முடியும். இதைத் தொடர்ந்து விமானத்தில் பயணிக்கவிருக்கும் பயணிகள் தங்கள் போர்டிங் பாஸை  விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கியோஸ் எனும் எந்திரத்தில் ஸ்கேன் செய்யும் போது ஒரு கூப்பன் கிடைக்கும். அந்த கூப்பனை  வைத்தும் இலவச WIFI வசதியை பெற முடியும்.

தற்போது 2 கருவிகள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கூடுதலாக கருவிகள் வைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இந்த புதிய வசதியால் விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.