தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் சமூக ஊடகமான பேஸ்புக் பக்கத்தில் அறிமுகமான நபர் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான வாட்ஸ்அப் லிங்க்கை அனுப்பி உள்ளார். அவர் அந்த லிங்கை கிளிக் செய்ததில் இணையதளத்தில் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான பகுதி நேர வேலைவாய்ப்பை வழங்கினார். அதற்கு பின்பு வாட்ஸ்அப் எண்ணின் மூலம் தொடர்ந்து வழிகாட்டல் வழங்கப்பட்டது.

அவரிடம் அதிக வருமானம் கிடைக்கும் என்று உறுதியளித்து ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட சொன்னார்கள். இதை நம்பி அவர் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். அதன் பின் மீண்டும் முதலீட்டுத் தொகையை பெற முயற்சி செய்தபோது பணத்தைத் திரும்ப பெற முடியவில்லை. இது குறித்து சந்தேகம் எழுந்தபோது சம்பந்தப்பட்ட நபர்கள் கூடுதல் பணம் கேட்டனர். பின்னர் இதனை மோசடி என்பதை அறிந்து கொண்ட அந்த நபர் உரிய சட்ட நடவடிக்கையை ப என் சி ஆர் பி புகார் பதிவு செய்துள்ளார்.

அதன் அடிப்படையில் காவல்துறையினர் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர். அதில் காவல்துறையினர் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன்களை கைப்பற்றியதோடு, வங்கி கணக்குகளை கண்டறிந்து அவற்றின் முடக்கம் செய்து நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது போன்ற போலியான விவரங்களை நம்பி யாரும் பணம் இழக்க வேண்டாம் என்றும், இளைஞர்கள் பெண்கள் ஆகியோர் இது போன்ற விவரங்களை தவிர்க்க வேண்டும் என்றும் மாவட்ட எஸ்பி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.