சென்னை விருகம்பாக்கத்தில் விஷ்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் பிரபலம். இவர் ஆன்லைன் டிரேடிங்கில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக கூறி புகார் எழுந்தது. இதனால் இவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் விஷ்ணு மற்றும் அவரது மனைவி அஸ்மிதா ஆகியோர் தன்னிடம் மோசடி செய்ததாக சந்திரசேகரன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் தனித்தனியாக பழகி பணம் பெற்று மோசடியில் விஷ்ணுவின் குடும்பம் ஈடுபட்டது புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆன்லைன் டிரேடிங் செய்ததாக கூறி ரூ. 1.62 கோடி மோசடி செய்த இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு அவரது மனைவி அஸ்மிதா, விஷ்ணுவின் தாய் ஆனந்தி மற்றும் தங்கை ஸ்ரீவித்யா ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.