
திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான குணசேகரன் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இதனால் அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் எம்எல்ஏ இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவர் கூறியதாவது, முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றதாக இருந்தது. கட்சி, மக்கள் பணிகளையும் திறம்பட ஆற்றியவர் எனப் புகழ்ந்துள்ள இபிஎஸ் குணசேகரன் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.