வருகைப் பதிவு குறைவால் பல்கலைக்கழக தேர்வு எழுத அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து மாணவர் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வருகைப் பதிவு குறைவாக இருக்கும் மாணவரை தேர்வெழுத அனுமதிப்பது முறையாக வருகைப் பதிவை வைத்திருக்கும் மாணவர்களை கேலிக்குள்ளாக்கிவிடும். கல்வி சார்ந்த விவகாரங்களில் தலையிட முடியாது எனப் பலமுறை நீதிமன்றம் தெரிவித்துள்ளது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.