25 தோசைகள்  சாப்பிடுவேன் என்று கூறி யூடியூப்பில் பிரபலமடைந்த பிரணவ் என்ற இளைஞர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் அவரின் தாயும் சகோதரியும் கலந்து கொண்டு அவர் 25 தோசை சாப்பிடுவார் என்று பேசினர். அதன் பிறகு youtube சேனல் ஒன்றுக்கு பிரணவ் பேட்டியளித்து பிரபலமானார். ஆனால் ஏப்ரல் நான்காம் தேதி அவர் குரோம்பேட்டை அருகே ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.