தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று பிறகு பெண்கள் மற்றும் மாணவிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகையாக 1000 ரூபாய் வழங்கும் நிலையில் அரசு பள்ளியில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இதேபோன்று மாணவர்களுக்கும் அரசு பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல்லும்போது தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற 6 முதல் 12-ம் வகுப்பு வரையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழில் படித்திருக்க வேண்டும். அப்போதுதான் இந்த உதவி தொகையை பெற முடியும்.

இந்நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்காக இந்த திட்டத்தில் தளர்வுகளை அறிவித்துள்ளார். அதன்படி திருநங்கை மற்றும் திருநங்கைகளுக்கு புதுமைப்பெண் திட்டத்திற்கு கீழ் விண்ணப்பிக்க 6 முதல் 12-ம் வகுப்பு வரையில் அரசு பள்ளியில் தமிழில் படித்திருக்க வேண்டும் என்ற தளர்வு நீக்கப்பட்டுள்ளது.

மேலும் சமீபத்தில் திருநங்கை ஜென்சி என்பவர் லயோலா கல்லூரியில் ஆங்கில கல்வியில் முனைவர் பட்டம் பெற்று உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்த நிலையில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் அதன்பிறகு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது கவனிக்கத்தக்கதாக மாறி உள்ளது.