
தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள கொடி மரங்களை அகற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசியல் கட்சிகள் உங்கள் அலுவலகங்களில் கொடி மரங்கள், கட்சி கொடிகளை வைத்துக் கொள்ளுங்கள்.
மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள விசயத்தில் ஜனநாயக உரிமையை கேட்க வேண்டாம். சாலைகள் என்பது தடையற்ற போக்குவரத்தும்,பொதுமக்களின் பாதுகாப்பும் முக்கியம். நெடுஞ்சாலைகளில் கட்சி கொடிகள், பிளக்ஸ் பேனர்கள், கொடி மரங்கள் வைக்க எந்த அனுமதியும் கிடையாது என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.