
அனைத்து அரசு சேவை இல்லங்களிலும் பெண் காவலர்களின் நியமிக்க உள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். அரசு விடுதியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வார்டன் விடுமுறையில் இருந்த சமயத்தில் இந்த குற்ற சம்பவம் நடந்துள்ளது மாணவி தைரியமாக அடையாளம் காட்டினார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவலர் மேத்யூ என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
பாதிக்கப்பட்ட 13 வயது மாணவிக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கையாக அனைத்து சேவை இல்லங்களிலும் பெண் காவலர்களை நியமிக்க இருப்பதாக அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.