கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பீச் ரோட்டில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு அமைந்துள்ளது. நேற்று அதிகாலை 4 மணிக்கு இந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து…. 5 மணி நேரம் போராட்டம்…. பாதிக்கப்பட்ட பொதுமக்கள்…!!
Related Posts
“உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து”… விருதுநகர் முன்னாள் கலெக்டர் வெளியிட்ட வைரல்பதிவு…!!
சமூக வலைத்தளங்களில் சமீப காலங்களாக ஒவ்வொரு சம்பவங்களும் ட்ரண்டாகி வருகிறது. அதே போன்று தான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் “ஏங்க கூமாப்பட்டிக்கு வாங்க…” என்று ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது கூமாபட்டி என்ற கிராமம் விருதுநகர்…
Read more“ஆண் நண்பருடன் 3 நாட்கள் ஹோட்டல் அறையில்….” பலாத்காரம் செய்து வீடியோ காலில் நண்பர்களிடம் காட்டி….! போதையில் ஓடி ஒளிந்த இளம்பெண்…. பகீர் பின்னணி….!!
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே இருக்கும் கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் ராஜீவ் காந்தி சாலையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக அந்த இளம்பெண் மேற்கு தாம்பரத்தில் தங்கி உள்ளார். இந்த இளம்பெண் ஒரு நட்சத்திர…
Read more