
பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உள்கட்சி மோதல் நடைபெற்று வருகிறது. இதனிடையில் இன்று பாமக தலைவர் ராமதாசை அன்புமணி சந்தித்து பேசினார். அதன் பின் தைலாபுரம் தோட்டத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி ராமதாசை சந்தித்து பேசி உள்ளார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த குருமூர்த்தி கூறியதாவது, நான் எனது நீண்ட கால நண்பரான ராமதாசை சந்தித்து பேசினேன். இது ஒரு நட்பு ரீதியான சந்திப்பு மட்டுமே. பாஜகவுக்காக நான் வரவில்லை. எனது நண்பர் என்ற முறையில் அவரை சந்தித்து நீண்ட நேரம் பேசினேன்.
அன்புமணி வந்ததே எனக்கு தெரியாது”இவ்வாறு கூறினார். அதன் பின் நிருபர் ஒருவர் உள்கட்சி விவகாரத்தில் சமாதானம் பேச சென்றீர்களா? எனக் கேட்ட கேள்விக்கு “அப்படி எதுவும் இல்லை” என ஆடிட்டர் குருமூர்த்தி பதிலளித்துள்ளார்.
இதனிடையே பாமகவில் நடைபெறும் உள் கட்சி மோதலுக்கு பாஜகவின் ஆதிக்கமே காரணம் என அரசியல் வட்டாரங்களில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.