சேலம் மாவட்டத்தில் உள்ள ஓலைப்பட்டி காட்டுவளவு பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான கோவிந்தனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் உறவினரான குமாருக்கும் நில பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில் கோவிந்தனின் மூத்த மகன் சர்ச்சைக்குரிய பாதை வழியாக சென்றுள்ளார். அப்போது குமாரும், அவரது சகோதரர்களான ராஜேந்திரன், வல்லமுத்து, தாய் செல்வி நான்கு பேரும் இணைந்து கோவிந்தனின் மகனை தாக்கியுள்ளனர். இதனை தட்டிக் கேட்ட கோவிந்தனையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த கோவிந்தன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜேந்திரன் உட்பட நான்கு பேர் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.