முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் (89) நெஞ்சுவலி மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பாரதி மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ள பிரதீபா பாட்டீலின் உடல்நிலை சீராக உள்ளதாக இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நெஞ்சுப் பகுதியில் காய்ச்சல் உள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் சிகிச்சையில் உள்ளார் மற்றும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்” என்று மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாட்டீல் இந்தியாவின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற முதல் பெண்மணி ஆவார். அவர் 2007 முதல் 2012 வரை உயர்மட்ட அரசியலமைப்பு பதவியை (குடியரசு தலைவர்) வகித்தார்.