அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புலிவாலை பிடித்தபடி புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

தமிழக அரசியல்வாதிகளில் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகுபவர் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு. மதுரையில் சில வருடங்களுக்கு முன்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெர்மாகோலை வைத்து செய்த அறிவியல் பரிசோதனையை தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் மறவாது.

இந்நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு செல்லூர் ராஜு புலிவாலை பிடித்தபடி புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.