கேரளாவில் கோழிக்கோடு ஐயப்பாடி சாலையில் இருக்கும் குடியிருப்பில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பிரபல மருத்துவமனைக்கு அருகில் உள்ள குடியிருப்பில் சிகிச்சைக்கு வரக்கூடியவர்கள் பலர் தங்கி இருந்திருக்கிறார்கள். அவர்களுடன் விபச்சார கும்பலும் தங்கிருந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த குடியிருப்புக்கு சென்று அதிரடி சோதனையிட்டனர். அப்போது அங்கு விபச்சாரம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்திய 2 பெண்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த கும்பல் வாட்ஸ்அப்பில் குழு ஒன்றை உருவாக்கி அதில் அழகிகளை தேடி வரும் வாடிக்கையாளர்களை இணைத்துள்ளனர். தங்களிடம் இருக்கும் அழகிகள் அவர்களுடன் உல்லாசமாக இருக்க பணம் உள்ளிட்ட விவரங்களை வாட்ஸ்அப் குழுவில் அந்த கும்பல் பகிர்ந்துள்ளது.

அதனை வாடிக்கையாளர்கள் பார்த்து அறிந்து கொள்வார்கள். பின்னர் அவர்கள் வாட்ஸ்அப் மூலமாக விபச்சார கும்பலை தொடர்பு கொண்டு அழகிகளுடன் உல்லாசமாக இருக்க வேண்டிய நேரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிந்துகொண்டனர்.

அதற்கு ஏற்ப அந்த குடியிருப்புக்கு சென்றுள்ளனர். அந்த குடியிருப்பில் மருத்துவமனையில் சிகிச்சை பெறக்கூடிய நோயாளிகளின் உறவினர்களும் இருந்துள்ளனர். அவர்களும் இந்த விபச்சார அழகிகளுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். அந்த வாட்ஸ்அப் குழுவில் நோயாளிகளின் உறவினர்கள் தான் அதிகமாக இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.