தூத்துக்குடியில் பாலின் காருண்யா, இவாஞ்சலின் சௌந்தர்யா என இரட்டை சகோதரிகள் வசித்து வருகிறார்கள். இவர்கள் தற்போது நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை  எழுதியுள்ளனர். இந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் இவர்கள் இருவரும் 585 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாவட்ட அளவில் 2ம் இடத்தையும் பிடித்துள்ளனர். முன்னதாக இவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும் ஒரே மதிப்பெண் எடுத்துள்ளனர்.

அதாவது இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 485 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இந்நிலையில் தற்போது இவர்கள் 12-ம் வகுப்பு பொதுத் தேர்விலும் ஒரே மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளனர். இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் சேர்ந்து பிஇ கணினி அறிவியல் படிக்க உள்ளதாக கூறப்படுகிறது.