ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, அன்பிற்கினிய முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் ஈரோடு மாவட்டம் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி உறவுகள் அனைவருக்கும் வணக்கம். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திமுக சார்பாக சந்திரகுமார் வேட்பாளராக போட்டியிடுகிறார். திராவிடம் மாடல் அரசின் மக்கள் வரவேற்பை யாவரும் அறிவர்.

இந்த ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்களை அப்பகுதி மக்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தின் வழியாக எடுத்து சென்றுள்ளோம். ஆகவே 5-ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு உரிய வாக்கு பதிவில் நாம் கூட்டணி கட்சியாக அங்கம் வகிக்கும் திமுக வேட்பாளர் சந்திரகுமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற  மக்கள், முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களது கரத்தை வலுப்படுத்த மறவாது வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமென்று முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி மக்களை கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.