நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் டைரக்டர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “அகிலன்”. ப்ரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கும் இந்த படம் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

இதில் நடிகர் ஜெயம்ரவி பங்கேற்று பேசியதாவது ” என் 20 வருட திரை வாழ்க்கையில் உங்களது ஒத்துழைப்பு, பாரட்டு நிறைய கிடைத்திருக்கிறது. மேக்கிங் பொறுத்தவரையிலும் அகிலன் மிகவும் கஷ்டமான திரைப்படம். இதெல்லாம் கிடைக்குமா, இதெல்லாம் எடுக்க முடியுமா, என நினைத்த போது தயாரிப்பாளரால் தான் இதை எடுக்க முடிந்தது.

இப்படத்தை சாத்தியமாக்கி உள்ள எனது படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. பாபி மாஸ்டர் பேராண்மையில் இருந்து தெரியும். இத்திரைப்படம் நன்றாக உருவானதற்கு காரணம் அவருடைய டீம் தான். தன்யா இப் படத்தில் சர்ப்ரைஸாக இருப்பார்” என அவர் பேசியுள்ளார்.