தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கும்பகோணம் வடக்கு செயற்பொறியாளர் திருவேங்கடம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற 7-ஆம் தேதி காலை 11:00 மணி முதல் மதியம் ஒரு மணி வரை கும்பகோணம் ராஜன் தோட்டம் மின்வாரிய அலுவலகத்தில் தஞ்சாவூர் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் கும்பகோணம் வடக்கு கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் செட்டிமண்டபம், நாச்சியார் கோவில், திப்புராஜபுரம், செம்மங்குடி, திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், பந்தநல்லூர், கதிராமங்கலம், குறிச்சி, ஆடுதுறை, திருநீலக்குடி, சோழபுரம் மற்றும் கும்பகோணம் வடக்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் நேரில் கலந்து கொண்டு மின்விநியோகம் தொடர்பான தங்களது குறைகளை மனுக்களாக கொடுத்து பயனடையலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.