திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் கிளாக்குளத்தில் உமயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரிமுத்து என்ற மகன் உள்ளார். இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். இவருக்கு கருப்பசாமி என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் அமர்ந்து மது குடிப்பது வழக்கம். தற்போது மாரிமுத்து குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு மாலை அணிந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு கருப்புசாமி அந்த பகுதியில் மது குடித்துக் கொண்டிருந்தார். இதனை பார்த்து மாரிமுத்து கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த கருப்புசாமி மாரிமுத்துவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த மாரிமுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கருப்பசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.