இந்தியாவில் உள்ள ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைக் தொடர்ந்து, பாகிஸ்தான் மீதான தீவிரவாத ஆதரவு குற்றச்சாட்டுகள் மீண்டும் தலைதூக்கின.

அந்த சூழலில், பாகிஸ்தான் முன்னாள் அமெரிக்க தூதராகவும், தற்போதைய பீப்பிள்ஸ் பார்ட்டி நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள ஷெரி ரஹ்மான்,  பத்திரிகையாளர் யால்தா ஹாக்கிம் முன்வைத்த கூர்மையான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் தொந்தரவு அடைந்ததுபோல் இருந்தார்.

அல் காயிதாவுடன் இணைந்ததாக கருதப்படும் Brigade 313 அமைப்பைப் பற்றிய கேள்விக்கு ரஹ்மான், “இந்த தகவல்களை யார் சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை.

இதே போன்று நானும் போலியான பக்கங்களை தயாரித்து உங்களிடம் காட்ட முடியும்,” என்றார். மேலும், இந்தியாவில் உள்ள உள்ளக பிரச்சனைகளை சுட்டிக்காட்டும் வகையில், “இந்தியாவில்  நூறு கிளர்ச்சிகள் நடக்கின்றன. அதற்கும் நாங்கள் தான் பொறுப்பா?” என்றவாறு எதிர்ப்பு தெரிவித்தார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா, பாகிஸ்தானில் உள்ள பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை ‘ஆபரேஷன் சிந்தூர்” மூலம் தாக்கியது. அந்த தாக்குதலில், ஜெய்ஷ்-எ-முகம்மது அமைப்பின் கமாண்டராக இருந்த மசூத் அஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் பாக்வால்பூரில் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது என பத்திரிகையாளர் ஹாக்கிம் மேற்கோள்காட்டினார்.

இதற்கு பதிலளித்த ரஹ்மான், “குழந்தைகள் தலைவர்கள் அல்ல” என கூறியதோடு,   “நீங்கள் காட்டும் மேற்கோள்கள் இந்திய பார்வையை  மட்டும் காட்டுகிறது” என விமர்சித்தார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த முக்கிய அமைச்சர்களை நேரடியாக வினவிவரும் பத்திரிகையாளர் யால்தா ஹாக்கிம், கடந்த ஏப்ரல் 24 அன்று பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்-ஐ நேர்கொண்டார்.

அவர், “பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்காக தீய செயல்களைச் செய்தது” என ஒப்புக்கொண்டார்.மேலும் கடந்த  மே 7-ஆம் தேதி தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அத்தாஉல்லா தரார்-ஐ சந்தித்த போது, அவர் “பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் இல்லை” என கூறினார் என ஹாக்கிம் மீண்டும் மேற்கோள் காட்டினார்.

இந்த தொடர் நேர்காணல்கள், பாகிஸ்தானின் தீவிரவாதத்தை மறைக்கும் முயற்சி, மற்றும் அரசியலுக்கான இரட்டை நோக்கங்களை வெளிக்கொணர்ந்துள்ளன. உலக நாடுகள், குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது உண்மையிலேயே கவலையூட்டுகிறது.

யால்தா ஹாக்கிம் போன்ற பத்திரிகையாளர்கள், இவ்வாறான உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதில்  மிக முக்கியமான பங்கு வகுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.