குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று முதல் குஜராத் மாநில அகமதாபாத் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த சோதனையில் இந்தியாவிலுள்ள அகமதாபாத்திலிருந்து, அமெரிக்காவிற்கு போதைப்பொருள் கடத்தப்படுவது தெரியவந்தது.

இந்த சோதனையில் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட இருந்த சமையல் மசாலா பாக்கெட்டுகளில் சுமார் 2 கிலோ மதிப்புள்ள போதைப்பொருள் அடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனை அகமதாபாத் காவல் துறையினர் கைப்பற்றினர். மேலும் இந்த கடத்தல் வழக்கில் சிக்கிய ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த 3 நபர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இந்த கடத்தல் குறித்து அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.