ஜிகர்தண்டா படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இதனால் 8 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி சிறப்பாக ஓடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்து விட்டேன். கார்த்திக் சுப்புராஜின் சிறப்பான படைப்பு ஜிகர்தண்டா 2.

அற்புதமாக இருப்பது எஸ்.ஜே சூர்யாவிற்கு வாடிக்கையான விஷயம் ஆகிவிட்டது. ராகவா லாரன்ஸின் நடிப்பு மிகவும் சிறப்பு. சந்தோஷ் நாராயணனின் இசை அழகு. படத்தின் கடைசி 40 நிமிடங்கள் உங்களது மனங்களை கொள்ளையடித்து விடும். படக்குழுவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.