திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் மாவட்ட செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிலையில் குடிமனை இல்லாத அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். 100 நாள் வேலைக்கு அரசு அறிவித்துள்ள சட்ட கூலி ரூ.281 வழங்க வேண்டும்.

அதேபோல் 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தில் அதிக நிதி ஒதுக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிற ஏழாம் தேதி கோட்டூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.