தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு தற்போது முன்னணி நடிகராக திகழ்கிறார். இவர் பத்து தல படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தன்னுடைய 48-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் கமல்ஹாசன் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது படத்தின் ஹீரோயின் குறித்த தகவலும் வெளிவந்துள்ளது. அதாவது தேசிய பெரியசாமி ரஜினிக்காக உருவாக்கிய கதையில் தான் சிம்பு நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க இருக்கிறாராம். நடிகை தீபிகா படுகோனே தமிழில் ரஜினி நடிப்பில் வெளிவந்த கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தீபிகா படுகோனே எஸ்டிஆர் 48 படத்தில் நடிப்பது பற்றிய எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை. மேலும் நடிகர் சிம்பு தற்போது ஒரு படத்திற்கு 20 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று வரும் நிலையில், பதான் படத்தின் வெற்றியை தொடர்ந்து தீபிகா படுகோனே தன் சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி விட்டார். இதனால் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் எஸ்டிஆர் 48 படத்தில் சிம்புவை விட தீபிகா படுகோனே தான் அதிக சம்பளம் பெறுவார் என்று கூறப்படுகிறது.