கிரிமினல் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் அப்டேட் கொடுத்துள்ளார்.

இயக்குனர் தக்ஷிணாமூர்த்தி ராம்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக்-சரத்குமார் இணைந்து நடிக்கும் திரைப்படம் கிரிமினல். இத்திரைப்படத்தை பார்த்தா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சேர்ந்து தயாரிக்க சாம் சி.எஸ் இசையமைக்கின்றார். இந்த திரைப்படத்தின் படபிடிப்பு சென்ற 23ஆம் தேதி மதுரையில் தொடங்கப்பட்டது.

இத்திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் கூறியுள்ளதாவது, எங்களுடைய புதிய ப்ராஜெக்ட் “கிரிமினல்” வெற்றிகரமாக மதுரையில் ஆரம்பிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. மொத்த திரைப்படத்தையும் ஒரே செட்யூலாக 40 நாட்களில் முடிக்க திட்டமிட்டு இருக்கின்றோம். இதற்கு முன்பு நடிக்காத கதாபாத்திரத்தில் சரத்குமார் மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்க உள்ளார்கள். இந்த படத்தில் கௌதம் கார்த்தி அக்யூஸ்ட் ஆக நடிக்க காவல்துறை அதிகாரியாக சரத்குமார் நடிக்கின்றார் என தெரிவித்துள்ளார்.