ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோவில் உள்ள செக்டர்-12 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வியாழக்கிழமை இரவு ஒரு தம்பதியர் சந்தையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில், நான்கு ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்களால் துரத்தப்பட்டு, ஆளில்லா இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, அவர்கள் இருவரையும் மிரட்டி மது அருந்துமாறு கட்டாயப்படுத்தினர். பின்னர், கணவனின் கண்முன்னே மனைவியை ஒருவர் பின் ஒருவராக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின்போது, அந்த தம்பதியர் பயத்தில் மதுவை அருந்தியுள்ளனர். அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என நினைத்தனர். ஆனால் அதற்கு பதிலாக அந்த நான்கு குற்றவாளிகள், மனைவியை மிரட்டிக் கொண்டு மிருகத்தனமாகச் செயல்பட்டுள்ளனர். கணவன் அவரை காப்பாற்ற முயன்றும், அவரும் தாக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர்கள் இருவரையும் மிரட்டி அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த கொடூர சம்பவத்தை தாங்க முடியாமல் கதறிய நிலையில் அந்த தம்பதியர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்துள்ளனர்.

புகார் அடிப்படையில் உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுத்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நள்ளிரவில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை அஜய் குமார், திலீப் குமார், ஜெய்குமார் மற்றும் இன்னொருவர் என சுட்டிக் காட்டி கைது செய்தனர். அவர்கள் அனைவரும் ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்களாக இருந்தது பின்னர் தெரியவந்தது. இந்த சம்பவத்தால் பொகாரோ நகரத்தில் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட தம்பதியர் ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். வேலைக்காக பொகாரோவில் தங்கியிருந்த அவர்கள் இருவரும், வேலை முடிந்த பிறகு சந்தைக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில் இந்த துயர சம்பவம் ஏற்பட்டது. தற்போது, குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் இந்தக் கொடூரச் செயலைக் கண்டித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்றுவருகிறது.