முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், ஆல்ரவுண்டர் யுவராஜின் தந்தையுமான யோகராஜ் சிங், மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். யுவராஜ் சிங் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, யோகராஜ் நீண்ட காலமாக தோனியின் கடுமையான விமர்சகராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் கங்குலி காலத்தில் இந்திய அணியில் இருந்த சகோதரர் கலாச்சாரம் ஒரு மனிதரால் மாறியது என்று கூறினார். இதன் மூலம் அவர் தோனியை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். சச்சின், ஹர்பஜன் சிங், ட்ராவிட், சேவாக் என வலிமையான அணியாக இருந்தது. ஆனால் ஒரு குடும்பத்தையே ஒருவருக்காக எரித்து விட்டோம் என்று கூறினார்.