
பெங்களூருவில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் காங்கிரஸ் தலைவர் சித்தராமைய்யா சர்ச்சையையில் சிக்கியுள்ளார். இந்த நிகழ்வின் போது, சித்தராமைய்யாவின் காலணியை அவரது தொண்டர் ஒருவர் தேசியக் கொடியை கையில் வைத்து கழற்றினார். அப்போது, சித்தராமைய்யாவின் காலணியில் தேசியக் கொடி பட்டதை உணர்ந்த அருகிலிருந்தவர் உடனடியாக தேசியக் கொடியை வாங்கினர்.
இந்த செயல் அங்கு இருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு சமூக ஊடகங்களில் பரவி, சித்தராமைய்யாவை கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். தேசியக் கொடியை இழிவுபடுத்திய விதமாக இச்செயல் விமர்சிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம், சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது