
உத்திரபிரதேசத்தில் இருந்து மேட்டூர் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கர்நாடக எல்லையில் உள்ள சோதனை சாவடியில், காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காவல்துறையினர் போக்குவரத்துக்கு இடையூறாக இல்லாமல் பேருந்து சாலையோரம் நிறுத்திவிட்டு ஆவணங்களை எடுத்து வருமாறு கூறினர். ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட தகராறில் சுகனேஸ்வரன், செந்தில்குமார், முத்தரசன் ஆகிய 3 காவலர்களையும், வட மாநிலத்தவர்கள் இரும்பு ராடால் தாக்கினர்.
இதனைக் கண்ட கிராம மக்கள் காவல்துறையினருடன் சேர்ந்து வடமாநிலத்தவரை தாக்கினார்கள். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளனர். அதோடு பேருந்து ஓட்டுனர் சிவ்நாராயணன் மற்றும் அவரது உதவியாளர் அஜய் மீது வழக்குப்பதிவு செய்து காவல் நிலைய பிணையில் விடுவித்தனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல், சோதனை சாவடி பணியில் 3 காவல்துறையினரையும் பணியிடம் நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.