
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து தற்போது தமிழகத்தில் ஆயிரம் கோடி முதலீடு செய்வதாக நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், அந்த நிதி யாருடையது என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திமுக கட்சியின் தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலினின் மகனான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நோபல் நிறுவனத்தில் கடந்த 2009-ம் ஆண்டு இயக்குனராக இருந்திருக்கிறார்.
திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நோபல் நிறுவனத்தில் கடந்த 2016-ம் ஆண்டு இயக்குனராக இருந்திருக்கிறார். துபாய் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்திடம் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளார். திமுகவினர் தொடர்புள்ள குழுமமான நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்வதாக அறிவித்திருக்கும் நிதி யாருடையது என்று தமிழக மக்களின் சார்பாக நான் கேள்வி எழுப்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
திமுகவினர் தொடர்புள்ள குழுமமான நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம், தமிழகத்தில் முதலீடு செய்வதாக அறிவித்திருக்கும் நிதி, யாருடையது என்று தமிழக மக்களின் சார்பாக நான் கேள்வி எழுப்புகிறேன்.
பதில் அளிப்பீர்களா திரு @mkstalin? (3/3)
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 15, 2023