தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் பொதுக்குழு கூட்டம் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்பி ஆ. ராசா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது காவிகளோடு திமுக கட்சி கூட்டணி வைத்திருந்தது. அப்போது காவிகளை கலைஞர் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தற்போது முதல்வர் ஸ்டாலினுக்கு பல ஆபத்துக்கள் இருக்கிறது. இதை யாராலும் மறக்க முடியாது. பாராளுமன்றத்தில் பிரதமர் உட்பட அனைவருமே உண்மையை பேச மறுக்கிறார்கள்.

மோடி உட்பட அனைத்து அமைச்சர்கள் மற்றும் பாஜக எம்பிக்களும் பொய்தான் பேசுகிறார்கள். என்னுடைய அரசியல் வரலாற்றில் பாராளுமன்றத்தில் இல்லாத ஒரே பிரதமர் மோடி மட்டும் தான். பிரதமர் மோடி பாராளுமன்ற ஜனநாயகத்தை அவமதிக்கிறார். அதானி விவகாரத்தில் மோடி மீது குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில் அதற்கு பிரதமர் மோடி பதில் கூறாததன் மர்மம் என்ன.? அதானி குற்றவாளி என்றால் மோடியும் குற்றவாளி தான். இதற்காக என் மீது வழக்கு தொடர்ந்து என் பதவியை பறித்தாலும் கவலை இல்லை. நான் சிறைக்குச் செல்ல தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.