டாடா என்ற சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ரத்தன் டாடா உடல் நலக் குறைவால் மும்பையில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். அவருக்கு 86 வயது ஆகிறது. இன்று மாலை அரசு மரியாதை உடன் ரத்தன் டாட்டாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசியல் பிரமுகர்கள் ரத்தம் டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் ரத்தன் டாடாவின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது.

இந்திய தொழில் துறையின் உண்மையான வைரம் அவர். ரத்தன் டாடா பணிவு, இரக்கத்தின் கலங்கரை விளக்கமாகவும் விளங்கினார். அவரது தொலைநோக்கு பார்வை டாடா குழுமத்தை மட்டுமில்லாமல் உலகளாவிய பார்வையையும் மாற்றியது. இந்தியாவை ஒருங்கிணைத்தல், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி என இடைவிடாத பணிகளை செய்து பல கோடி மனிதர்களின் நம்பிக்கைக்கு உறுதுணையாக இருந்தவர் ரத்தன் டாடா. இந்தியா ஒரு மிகப்பெரிய பிரம்மாண்ட துணை இழந்துவிட்டது. அவரின் செயல்பாடுகள் ஒவ்வொரு தலைமுறைக்கும் ஊக்கமளிக்கும் விதமாக இருக்கும். இந்த சோக தருணத்தில் அவரின் குடும்பத்தினர் சக ஊழியர்கள் டாட்டா குழுமத்திற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.