திருச்சிற்றம்பலம், வாத்தி திரைப்படங்களை அடுத்து தனுஷ் “கேப்டன் மில்லர்” எனும் பெயரில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங்கை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு அருகே அரங்குகள் அமைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தனுஷ் திரைப்படத்தின் சூட்டிங் காரணமாக விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புலிகள் காப்பகத்திற்கு அருகே உயர் பீம் விளக்குகள் அமைத்து சூட்டிங்கை நடத்துகின்றனர். இதன் காரணமாக யானை, புலி உள்ளிட்ட விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழலுக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனிடையே சூட்டிங் நடத்த முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா? என தெரியவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து வனத்துறைக்கு புகாரும் அனுப்பியுள்ளனர். இதனால் தனுஷ் படப்பிடிப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.