ஈரோடு மாவட்டத்தில் 73 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 18 நகர்புற நலவாழ்வு மையங்கள், 98 கிராமப்புற துணை சுகாதார நலவாழ்வு மையங்கள், 8 அரசு மருத்துவமனைகள், 1 அரசு மருத்துவ கல்லூரி மையம் அமைந்துள்ளன. இம்மையங்களில் புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை முகாம் மேற்கொள்ள பட்டது.

இதில் மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் பரிசோதனை செய்ததுடன் இல்லம் தேடி சென்றும் பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த பரிசோதனையில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 478 பேருக்கு வாய் புற்றுநோய், 2 லட்சத்து 21 ஆயிரத்து 765 பேருக்கு மார்பக புற்றுநோய், 2 லட்சத்து 21 ஆயிரத்து 816 பேருக்கு கர்ப்பப்பை புற்று சோதனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில் 2 லட்சத்து 8,699 வாய் புற்றுநோய் பரிசோதனை செய்ததில் 22 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் 22 பேருக்கு மார்பக புற்றுநோயும், 9 பேருக்கு கர்ப்பப்பை வாய் புற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் மொத்தம் 3 லட்சத்து 57 ஆயிரத்து 642 பேருக்கு பரிசோதனை செய்தது, 53 பேருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.