தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டணமில்லா தங்கும் விடுதியில் தங்கி படிக்க விருப்பம் உள்ள மாணவர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் பள்ளிகள், கல்லூரிகள், ஐஐடி, டிப்ளமோ விடுதிகளில் தங்கி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த 2025- 2026 ஆம் கல்வியாண்டிற்கான கட்டணம் இல்லா விடுதி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதில் விருப்பம் உள்ள மாணவர்கள் ஜூன் 10ஆம் தேதி முதல் இணையத்தில் https://nallosai.tn.gov.in/ என்ற முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கட்டணமில்லா விடுதி வசதியினை பெற மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 2.50 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். குறிப்பாக மாணவர்கள் மத்திய/ மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் தங்கி பயில வேண்டும்.

இதுகுறித்து கூடுதல் தகவல்களை பெறுவதற்கு 1800-599-7638 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு அலுவலக நேரத்திற்குள் அதாவது காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.