தமிழக அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கூறியதாவது பொது கட்டிட உரிமம் கட்டிடத்தில் உறுதித் தன்மை குறித்த சான்றிதழ் மற்றும் மேற்படி சான்றிதழ் வழங்க அனுமதிக்கப்பட்ட நியமனம் பெற்ற பொறியாளர்கள் ஆகியவற்றிற்கான செயல்முறைகள் தமிழ்நாடு பொது கட்டிடங்கள் சட்டம் 1965 மற்றும் தமிழ்நாடு பொது கட்டிடங்கள் விதிகள் 1966 ஆகியவற்றின் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
பொது கட்டிடம் உரிமம் பெறுவதற்கு பொதுப் பணித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட நியமனம் பெற்ற பொறியாளரால் கட்டிடத்தின் உறுதித் தன்மை குறித்து சான்று அளிக்கப்பட வேண்டும். கீழ்காணும் சேவைகளை தற்போது https://www.tnesevai.tn.gov.in/இணையதளம் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம்.
அதாவது இ சேவை இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் உள் நுழைந்த உடன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஆவணங்கள் சரி பார்க்கப்பட்ட பின்பு பொது கட்டிடங்களுக்கான உரிமத்தினை இணைய வாயிலாக பெற்றுக் கொள்ளலாம். மேற்படி கட்டிட உறுதி தன்மை சான்றிதழில் குறிப்பிட்டுள்ள காலம் வரை கட்டிடத்தின் பொது கட்டிட உரிமம் செல்லுபடியாகும்.
ஏற்கனவே விண்ணப்பித்து நிலுவையில் இருந்தால் இ சேவை இணையதளம் வழியாக மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். பொது கட்டிடங்களுக்கான உரிமத்தின் காலம் முடியும் தருவாயில் இருந்தால் இ சேவை இணையதளம் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.