
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், ரூ.7,375 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 19000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் வேலூர், தூத்துக்குடி, திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இந்த தொழிற்சாலைகள் அமைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.