தொழில் தொடங்கி வாழ்க்கை முன்னேற்ற கடன் வாங்குபவர்கள் திரும்ப செலுத்துவதை இயற்கை பேரிடர்கள், காலநிலைகள் மாற்றம் செய்கின்றன. அதாவது அதிக மழையினால் ஏற்படும் வெள்ளம், நிலநடுக்கம், சுனாமி நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் ஆகும். இதனால் தொழில் தொடங்குவோருக்கு கடனை திரும்பிக் கொடுக்க முடியாத நிலை உருவாகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பேரிடர்களால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்க பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண வழிமுறைகளை வங்கி வகுத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இதற்கு உதவுவதற்கு முன் வந்துள்ளது.

தற்போது ஒவ்வொரு மாவட்ட, மாநிலங்களிலும் ஏற்படும் பேரிடர்களை குறித்த அறிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் வங்கிக்கு அறிவிக்கிறது. பேரிடர் ஏற்பட்ட பகுதிகளில் நிவாரண நிதிகளை அறிவிப்பதற்காக இரண்டு குழுக்களை ஏற்பாடு செய்துள்ளது, மாநில அளவிலான வங்கியலாளர் குழுக்கள் (SLBC), மாவட்ட ஆலோசனைக் குழு (DCC) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேளாண்மை, கைவினை தொழில் முனைவோர், சிறு குறு தொழில்கள் செய்வோர், ஊரக வணிகர்கள் போன்ற நடுத்தர தொழில் செய்பவர்கள் பெற்ற கடன்கள் குறித்த நிவாரண நிதி அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.