நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.அதன் பிறகு தங்கம் வெள்ளி மற்றும் வைர நகைகள் மீதான சுங்கவரி அதிகரிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஆனால் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரங்கள் மீதான சுங்கவரி குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.