
தமிழகத்தில் மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதமே கோடை விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி வரை நீடித்தது. தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்து விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் அடுத்ததாக 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இறுதி தேர்வுகள் முடிவடைந்து கடந்த ஏப்ரல் மாதமே கோடை விடுமுறை வழங்கப்பட்டது.
இந்நிலையில் பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு பள்ளி கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. அதன் பிறகு இன்று பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இரு மடங்காக அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த ஆண்டு 6000 மாணவர்கள் புதிதாக சேர்ந்த நிலையில் இந்த ஆண்டு 16,490 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதிகபட்சமாக LKG, UKG-யில் 7500 குழந்தைகள் சேர்ந்துள்ளனர்.