
இந்திய ரயில்வே ரயில் டிக்கெட்டுகளின் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் குறைந்த செலவில் அதிக தூரம் பயணம் செய்ய பொது போக்குவரத்து என்பது ரயில்வே மட்டும்தான். அது மட்டுமின்றி படுக்கை வசதி, ஏசி வசதி என பயணிகளுக்கு வசதியாக தங்கள் பயணத்தை மேற்கொள்ள உதவுவதும் ரயில் பயணம்தான். சமீபத்தில் இந்திய ரயில்வே தக்கல் டிக்கெட் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்காமல் ஏஜென்ட் மூலம் அதிக விலைக்கு விற்கும் சூழல் இருந்தது.
இதை தடுக்க இந்திய அரசு ஐ ஆர் சி டி சி யில் போலி கணக்குகளை கண்டறிந்து அதனை முடக்கியது. மேலும் ஐ ஆர் சி டி சி கணக்குகளுடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்திய ரயில்வே ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு 2 பைசாவும், சாதாரண வகுப்பிற்கு மீட்டருக்கு ஒரு பைசாவும் உயர்த்தப்பட உள்ளது.
இந்த கட்டண உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவு ரயில்வேயில் செயல்பாட்டு செலவுகளை சமாளிக்கவும், தேவைகளை மேம்படுத்தவும் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.