
சென்னையில் ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் இணைப்பு சாலை திட்டம் என்பது பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகியவற்றை இணைக்கும் ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், இரண்டு சாலைகளிலும் உள்ள போக்குவரத்தை சீராக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் இணைப்பு சாலை, நீலாங்கரை முதல் தொரைப்பாக்கம் வரை அமைய உள்ளது.
இந்த பக்கிங்காங் கால்வாய்க் குறுக்கே ரூபாய் 30 கோடி ல் இரும்பு பாலம் அமைய உள்ளது. இந்நிலையில் ஓஎம்ஆர், ஈசிஆர் இணைப்பு சாலை திட்டத்தில் 376 மீட்டர் நீளத்திற்கு பாலம் அமைக்க கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரி நெடுஞ்சாலைத்துறைக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது.