இந்திய ரிசர்வ் ஆகிய நகை கடன் தொடர்பாக புதிய விதிமுறைகளை சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, தங்க நகை கடன் வாங்குபவர்கள் நகைக்கு நீங்கள்தான் உரிமையாளர் என்று ஆதாரத்தை கொடுக்க வேண்டும். தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே நகை கடனாக வழங்கப்படும். தங்க நகையின் தூய்மை தன்மை குறித்து வங்கிய இடம் சான்றிதழ் பெறுவது கட்டாயம். குறிப்பிட்ட வகையிலான தங்கங்களுக்கு மட்டுமே நகை கடன் கொடுக்கப்படும்.

நகை 22 கேரட் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். வெள்ளி நகைகளுக்கும் நகை கடன் பெற்றுக் கொள்ளலாம். தனிநபர் ஒரு கிலோ தங்க நகை வரை மட்டும்தான் அடகு வைக்க இயலும். நகை கடன் ஒப்பந்தத்தில் முழுமையான தகவல் இடம்பெற்றிருக்க வேண்டும். நகை கடன் வாங்கியவர் அந்த கடனை திருப்பி செலுத்திய ஏழு வேலை நாட்களில் நகையை திருப்பி ஒப்படைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் சம்பந்தப்பட்ட வங்கிகள் ஒரு நாளைக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமாக கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறைகளில் பொதுமக்களின் கருத்து கணிப்பு அடிப்படையில்  தளர்வுகளை  ஏற்படுத்த வேண்டும் என்று தற்போது மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது. அதாவது சிறிய தொகைக்கு நகை கடன் பெறுபவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் இந்த புதிய விதிமுறைகளில் சில பரிந்துரைகளை ரிசர்வ் வங்கியிடம் மாற்றம் செய்யுமாறு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி 2 லட்சத்திற்கும் குறைவாக நகை கடன் வாங்குவோருக்கு இந்த புதிய விதிகளில் இருந்து தளர்வு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் மத்திய  அரசு புதிய விதிகளில் மாற்றம் செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அதனை பரிந்துரை செய்வதாக ரிசர்வ் வங்கியும் உறுதி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் இது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியதாவது நகை கடன்களுக்கான விதிகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய நிதி அமைச்சகம் பரிந்துரை செய்ததை வரவேற்கிறேன். ஒன்றிய நிதி அமைச்சருக்கு நான் எழுதிய கடிதம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. ஏழைகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த கொள்கையாக இருந்தாலும் மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவெடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.