தமிழக பள்ளிக்கல்வித்துறை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 1.5 கோடி ரூபாய் கட்டணபாக்கிய செலுத்த வேண்டியிருக்கிறது என்று குற்றசாட்டு எழுந்த நிலையில் இதனை அன்பில் மகேஷ் பொய்யாமொழி மறுத்தார். அதன் பிறகு எந்த ஒரு கட்டண பாக்கியும் இல்லை எனவும் செலுத்த வேண்டிய பாக்கிய மற்றும் நிலவை தொகைகள் சரியான முறையில் செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஆனால் கட்டணம் செலுத்தப்படவில்லை எனவும் இதன் காரணமாக பள்ளிகளில் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்படும் எனவும் தகவல் வெளிவந்தது. இதனை பாஜக கட்சியின் மாநில தலைவரும் கூறியிருந்த நிலையில் தற்போது அதற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.
அதாவது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கட்டணத்தை செலுத்த வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை எழுதிய கடிதத்தை அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
கடந்த 19.12.2024 அன்று, பள்ளிக்கல்வித்துறையின் தொழிற்கல்வி இணை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் எழுதிய கடிதத்தில், BSNL நிறுவனத்திற்குச் செலுத்தப்படவேண்டிய நிலுவைத் தொகையான 1.5 கோடி ரூபாயை உடனடியாக செலுத்துங்கள் என்றும், இல்லையெனில் சேவை துண்டிக்கப்படும் என்று BSNL நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், BSNL நிறுவனத்திற்குச் செலுத்தவேண்டிய நிலுவைத் தொகை எதுவும் இல்லை என்று மீண்டும் பொய் சொல்லியிருக்கிறார்.
அப்படியானால், பள்ளிக்கல்வித்துறையின் தொழிற்கல்வி இணை இயக்குநர் பொய் சொல்கிறார் என்கிறாரா அமைச்சர்? சாதாரண நிகழ்வுகளைக் கூட, சாதனைகள் போலக் காட்டிக் கொள்ளும் விளம்பர மாடல் ஆட்சியில், எந்தத் துறையும் தங்களுக்கான பணிகளைச் சரிவர மேற்கொள்வதில்லை. எனவே, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், வறட்டு கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் மீண்டும் பொய் சொல்வதை நிறுத்திவிட்டு, மாணவர்களின் கல்வியோடு விளையாடாமல் இணைய இணைப்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்த வலியுறுத்துகிறோம்.

Image