தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் கரும்பு விவசாயி சின்னத்தில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி போட்டியிட உள்ளதாக கட்சியின் தலைவர் ஜெயக்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 10 சின்னத்திற்கு விருப்பம் தெரிவித்ததாகவும் தேர்தல் ஆணையம் தங்களுக்கு கரும்பு விவசாயி சின்னத்தை வழங்கியதாகவும் கூறினார். மேலும் நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் மட்டும் தான் உள்ளதாகவும் தாங்கள் அகில இந்திய கட்சி என்றும் அவர் தெரிவித்தார்.