தமிழகத்தில் பிஇ மற்றும் பிடெக் போன்ற படிப்புகளுக்கான பொறியியல் கல்லூரிகளில் சேர நடைபாண்டில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் பொறியியல் படிப்பு தரவரிசை பட்டியலை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.

அதில் பேசிய அவர், பொறியியல் தரவரிசையில் 200/200 கட் ஆப் பெற்ற முதல் பெண் நேத்ரா (திருச்செந்தூர்), இரண்டாவது இடத்தில் ஹரிணிகா (தர்மபுரி), மூன்றாவது இடத்தில் ரோஷினி பானு (திருச்சி) ஆகியோரும் உள்ளனர். பட்டியலில் முன்னணியில் உள்ளவர்கள் எல்லாம் பெண்தான். நீட் தேர்வு காரணமாக பொறியியல் கலந்தாய்வு ஜூலை இரண்டாம் தேதிக்கு தள்ளி வைத்தோம் என அமைச்சர் கூறியுள்ளார்.