
சட்டப்பேரவையில் தமிழக நகர் புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் சட்ட மசோதாக்களை முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது மாற்றுத்திறனாளிகளின் நலனில் அக்கறையுடன் பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கப்பட்டு வருகிறது. அதன் படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவது தொடர்பாக 2 மசோதாக்களை தாக்கல் செய்தார். இந்நிலையில் தற்போது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர். என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.